செவ்வாய், 16 மார்ச், 2010

20 ஆண்டுகளின் பின்னர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை திறந்துவைப்பு

வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன.

யுத்தம் காரணமாக,1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 1998ஆம் ஆண்டு வரை மானிப்பாயிலும்,பின்னர் தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையிலும் மேற்படி வைத்தியசாலை இயங்கிவந்தன.

யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷின் வேண்டுகோளுக்கு இணங்கவும்,யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் அனுமதியுடனும் மேற்படி வைத்தியசாலை தனது சொந்த இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் மேற்படி வைத்தியசாலையை திறந்துவைத்ததாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.