வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கட்டார் நாட்டில் சித்திரவதைக்குள்ளான மற்றுமொரு பெண் சித்திரவதை

கட்டார் நாட்டில் சித்திரவதைக்குள்ளான பெண் ஒருவர் தீக்காயங்களுடன் நேற்று வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சந்தன சந்திரசேகர தெரிவித்தார்.

கட்டார் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய மதுரங்குளி கணமூலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஏ.எம். ஹில்மியா என்பவரே இவ்வாறு தீக்காயங்களுடன் நாடு திரும்பி சிகிச்சைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

கட்டார் நாட்டில் வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றய போது அங்கு தன்னால் ஏற்பட்ட தவறொன்றின் காரணமாக அவ்வீட்டிலிருந்த பெண் தன் மீது சுடுநீர் அடங்கிய பாத்திரம் ஒன்றை வீசி தாக்கியதாகப் பொலிசாரிடம் தெரிவித்துள்ள இப்பெண், இதனாலேயே தனக்கு இந்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தான் கடந்த 13ம் திகதி இத்தாக்குதலுக்குள்ளானதாகவும், நேற்று முன்தினம் நாடு திரும்பியதாகவும் அப்பெண் பொலிசாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.