செவ்வாய், 13 டிசம்பர், 2011

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

கனடாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 20 இளைஞர்களிடம் குறைந்தபட்சம் 18 லட்சம் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கண்டி பொலிஸ் விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த இந்நபர் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட முற்றுகையின்போது, குறித்து இளைஞர்களின் 16 கடவுச்சீட்டுகளையும அச்சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன