ஞாயிறு, 28 அக்டோபர், 2012

திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம் ஆனால் இலவச கருக் கலைப்பு: பிரான்சில் புதிய சட்டம்

பிரான்ஸ் நாட்டில் திருமணம் ஆகாமலே பெண்கள் கர்ப்பம் ஆவது அதிகமாக உள்ளது. அதிலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் அதிக அளவில் கர்ப்பம் அடைகிறார்கள். இவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் செலவாகிறது. எனவே கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

இது மட்டும் அல்லாமல் வேறு வகையான பிரச்சினைகளும் அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் இலவசமாக கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.


இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த இலவச கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு மேல் உள்ளவர் கருக்கலைப்பு செய்தால் 80 சதவீத பணத்தை அரசே திருப்பி தரும் வகையில் புதிய சட்டமும் கொண்டு வரப்பட உள்ளது.