ஜனாதிபதியின் பாரியார் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு விஜயம்!
ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ மஹரகமை புற்று நோய் ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்தார்.அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கு பழவகைகளையும் வழங்கினார்.
டிரகன் புருட் (Dragon Fruit) என்ற பழம் புற்று நோயாளருக்கு சிறந்தது என வைத்தியர்கள் சிபார்சு பண்ணியுள்ளனர் .
எனவே தனது வீட்டுத் தோட்டத்தில் (அலரி மாளிகையில்) முதன்முதலாக பயிரிட்ட டிரகன் புருட் பழவகையை நோயாளர்களுக்கு வழங்குவதற்காகவே ஜனாதிபதியின் பாரியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.