செவ்வாய், 5 ஏப்ரல், 2016

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாள் சம்பிக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மானம், சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 42 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
அண்மையில் இராஜகிரியவில் வைத்து சம்பிக்க ரணவக்கவின் அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் மோதி இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.