சனி, 9 ஏப்ரல், 2016

“ விரைவில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணா­விடின் ஆயுதம் தாங்­கிய கிளர்ச்­சிகள் மீண்டும் தலை­தூக்கும்” ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால

இந்­த­யு­கத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டா­விடின் எதிர்­கா­லத்தில் நாட்டை பிரிப்­பதற்­கான ஆயுதம் தாங்­கிய கிளர்ச்­சிகள் தலை­தூக்கும். எனவே, இனப்­பி­ரச்­சி­னைக்கு நாம் தீர்வு காண­வேண்­டி­யது அவ­சியம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் அர­சாங்கம் நடத்­து­வ­தற்கு உடன்­ப­டிக்­கையை செய்­து­கொண்டு வழி­காட்­டி­யவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவே ஆவார் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

கொழும்பு பண்­டா­ர­நா­யக சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற 1956 எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­ய­காவின் மக்கள் புரட்சி சுதந்­திர வெற்­றியின் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். 
 
 
இந்த நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் இசைக்­கப்­பட்­டமை விசேட அம்­ச­மாகும்.
 
இந்­நி­லையில் ஜனா­தி­பதி அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,
 
பண்டா - செல்வா ஒப்­பந்தம், டட்லி - செல்வா ஒப்­பந்த ஆகி­ய­வற்றின் மூலம் அன்று இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்றுக் கொடுக்க முயற்­சிக்­கப்­பட்­டது. ஆனால் எதிர்ப்­புகள் கார­ண­மாக அந்த உடன்­ப­டிக்­கையை தீவைத்து எரிக்கும் நிலைமை அன்று பண்­டா­ர­நா­ய­கா­வுக்கு ஏற்­பட்­டது. ஆனால் அன்று உண்­மையில் இதனை எதிர்த்­த­வர்கள் உடன்­ப­டிக்­கையின் சாதகம்இ பாதகம் தொடர்­பான பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருக்க வேண்டும். அவ்­வாறு செய்­யாது அது கிழித்து எரி­யப்­பட்­ட­தனால் இன்றும் இனப்­பி­ரச்­சினை தீராமல் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.
 
அதே­போன்று ஜே.ஆர். ஜெய­வர்­தன 13 ஆவது திருத்­தத்தை கொண்­டு­வந்தார். இந்­திய - இலங்கை உடன்­ப­டிக்­கையை செய்து கொண்டார். சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக தீர்வுப் பொதியை கொண்­டு­வந்தார். அதுவும் தீ வைத்து எரிக்­கப்­பட்­டது. எனவே 1956 இல் இருந்த பிரச்­சினை இன்னும் தொடர்ந்­த­வண்­ணமே உள்­ளது.
 
எனவே இந்த யுகத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும். இல்­லா­விட்டால் மீண்டும் நாட்டை பிரிக்கஇ தனி­ஈழம் கேட்க ஆயுதம் தாங்­கிய கிளர்ச்­சிகள் தலை­தூக்கும். எனவே இதற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. அனை­வரும் இணைந்து இதற்கு தீர்­வு­காண வேண்டும்.
 
1950 ஆண்­டி­லி­ருந்து இலங்­கையில் கூட்­டாட்சி இடம்­பெ­று­கின்­றது. அது ஒன்றும் புதி­தா­ன­தல்ல. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கூட்­டாட்சி நடத்­து­வ­தற்கு 2007 ஆம் ஆண்டு அல­ரி­மா­ளி­கையில் உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்­டவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவே ஆவார்.
 
அந்த உடன்­ப­டிக்­கையை அன்று சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக இருந்த நானும்இ ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் மலிக்­ச­ம­ர­விக்­ர­மவும் கைச்­சாத்­திட்டோம். ஆனால் மஹிந்த ராஜ­பக்ஷ ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து 17 பேரை பிரித்­தெ­டுத்து ஆட்­சியை முன்­னெ­டுத்தார். இவ்­வா­றான செயற்­பா­டுகள் முரண்­பா­டா­ன­தாகும். எனக்கு உடன்­பா­டு­இ­ருக்­க­வில்லை. நான் அதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.
 
1956 இல் பண்­டா­ர­நா­யக பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் அமைச்­ச­ர­வை­யிலும் முரண்­பா­டுகள் எழுந்­தன. அன்று அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பல அமைச்­சர்கள் செயற்­பாட்­டார்கள். வேலை­நி­றுத்தம் செய்­தனர். இவ்­வா­றான பல நெருக்­க­டி­களை பண்­டா­ர­நா­ய­க­வுக்கு கொடுத்­தனர். அதே­போன்று முது­கெ­லும்பு இல்­லா­தவன்இ பல­வீ­ன­மா­னவன் என்றெல்லாம் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் விமர்சித்தனர். இன்று என்னையும் இப்படித்தான் பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் நாடும்இ மக்களும் எனக்குமுக்கியம். என் கடமையை நிறைவேற்றுவேன்.
 
பண்டாரநாயகாவை பயங்கரவாதிகளோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களோ கொலை செய்யவில்லை. மாறாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களே கொலை செய்தனர் என்றார்.