வியாழன், 26 ஜூலை, 2012

கிளிநொச்சி பகுதியில் கடையை உடைத்து பொருட்கள் களவு.

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மணியங்குளம் பகுதியில் உள்ள கடையை உடைத்து சுமார் ஒரு லட்சத்த முப்பத்தேழாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடிச் செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இரவு கடையைப் பூட்டிவிட்டு உரிமையாளர் வீட்டிற்குச் சென்று காலையில் வந்து பார்த்த வேளையில் கடை உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டதைக் கண்டுள்ளார்.

இது சம்பந்தமாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறையிடப்பட்டுள்ளது.