வியாழன், 26 ஜூலை, 2012

கனகராயன்குளம் பகுதியில் கைவிடப்பட்ட ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு.

கனகராயன்குளம் பகுதியில் உள்ள புகையிரதப் பாதை அருகில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தப் பொருட்கள் பொலிசாரால் பற்றைக்குள் இருந்து எடுக்கப்பட்டது.

கிரனைட்லோஞ்சர்கள் இரண்டு மற்றும் அதற்குப் பயன்படுத்தும் குண்டுகளுமே மீட்கப்பட்டுள்ளன.இது சம்பந்தமாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.