வியாழன், 17 மார்ச், 2016

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட பலர் பங்கேற்பு (விடியோ இணைப்பு)

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முக­மாக இன்­றைய தினம் பொது எதி­ர­ணி­யி­னரால் ஹைட் பார்க் மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 48 எம்.பி.க்கள்   கள­மி­றங்­  கி­யி­ருந்­தனர்.

அத்துடன் சுதந்திரக்கட்சியின் 30 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த போராட்­டத்­தில் பல்­லா­யிரக் கணக்­கான கட்சி ஆத­ர­வாளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
 
 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளி கட்­சியின் தலை­வர்­களும் கலந்து கொண்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது. இன்று நடை­பெற்ற போராட்­டத்தின் கார­ண­மாக  கொழும்பில் பல பகு­தி­க­ளிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைக்காதே , எட்காவை உட­ன­டி­யாக நிறுத்து போன்ற கோஷங்­களை எழுப்­பிய வண்­ணமும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் புகழ்­பா­டிய வண்­ணமும்  ஆத­ர­வா­ளர்­கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பல்வேறு காரணங்களை முன்வைத்து மஹிந்த அணியினர் இன்று இந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ , முன்னாள் சபா­நா­ய­கரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ஷ, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலைவர் சோமா­வன்ஸ அம­ர­சிங்க, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா , முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
 
மேலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ஸ, தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன , வாசு­தேவ நாண­யக்­கார , சந்­தி­ர­சிறி கஜ­தீர, உதய கம்­மன்­பில,  முன்னாள்  அமைச்­சர்­க­ளான திஸ்ஸ விதா­ரன, ஆகி­யோரும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜ­பக்ஷ, கெஹ­லிய ரம்­புக்­வெல, சி.பி ரத்­நா­யக்க, லோஹான் ரத்­வத்தை ,குமார வெல்­கம, காமினி லொக்­குகே, சுசந்த புஞ்சி நிலமே, திலும் அமு­னு­கம, கீதா குமா­ர­சிங்க ,எஸ்.சந்­தி­ர­சேன, மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே, ரோஹித்த அபே­கு­ண­வர்­தன ,டலஸ் அழ­கப்­பெ­ரும ,மஹிந்த யாப்பா அபே­வர்­தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்த போராட்­டத்­தில் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான மக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

இதன்­போது போராட்­டத்­திற்கு பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்தது. 
 
இந்த போராட்டத்தின் காரணமாக கொழும்பின் நகர மண்டபம், மருதானை, கொம்பனிதெரு ,பொரளை, நாராஹேன்பிட்டிய ,கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. இந்த போராட்­டத்­தில் பல்­லா­யிரக் கணக்­கான பொதுமக்கள் கட்சி ஆத­ர­வாளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.