ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளிக்கக் கோரி 500 கையெழுத்துகளை சேகரிப்பதற்கான மனு ஒன்று இணைத்தளங்களில் வலம் வருகிறது.
இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவி லோரா டுபுய் லஸரே இம்மனுவில் கோரப்பட்டுள்ளார்.
change.org (சேன்ஜ்.ஓர்க்) எனும் அமெரிக்க சமூகசேவை நிறுவனமொன்றின் இணையத்தளத்தில் இலங்கைக்கான இலங்கையர்கள் எனும் பெயரில் இந்த மனு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றுவரை இலங்கை, அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, வியட்நாம், ஒமான், டுபாய் உட்பட பல நாடுகளிலிருந்து சுமார் 365 பேர் இதில் கையெழுத்திட்டிருந்தனர்.
Friday 16 March 2012
புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று தேர்தல் குறித்து 19ஆம் திகதி தீர்ப்பு
புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்கான அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்களை நடத்த தடை விதிப்பதா? இல்லையா? என மார்ச் 19ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது.
மார்ச் 24ஆம் திகதி நடத்தவிருந்த இந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை தடை செய்யக் கோரும் மனுக்களை தாக்கல் செய்த தரப்பினர்களின் வாதத்தைக் கேட்ட நீதியரசர் எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா, தீர்ப்பு வழங்குவதற்கான தினத்தை அறிவித்தார்.
ஏற்கனவே தேர்தல் ஆணையாளர், மார்ச் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பை அன்றைய தினம் நடத்துவதில்லை என தீர்மானித்துவிட்டார்.
ஆணைகோரும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் தமது கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணையாளர் நீதிமன்றத்தில் கூறினார்.
மார்ச் 24ஆம் திகதி நடத்தவிருந்த இந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை தடை செய்யக் கோரும் மனுக்களை தாக்கல் செய்த தரப்பினர்களின் வாதத்தைக் கேட்ட நீதியரசர் எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா, தீர்ப்பு வழங்குவதற்கான தினத்தை அறிவித்தார்.
ஏற்கனவே தேர்தல் ஆணையாளர், மார்ச் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பை அன்றைய தினம் நடத்துவதில்லை என தீர்மானித்துவிட்டார்.
ஆணைகோரும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் தமது கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணையாளர் நீதிமன்றத்தில் கூறினார்.
சட்டவிரோதமாக சிகரெட் வைத்திருந்த குற்றச்சாட்டு: சீனப் பெண்ணுக்கு அபராதம்
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் 10 இற்கும் மேற்பட்ட சிகரெட் பக்கற்றுகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சீனப் பெண்ணொருவருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் 150,000 ரூபா அபராதம் விதித்தது.
யான் சூ ஜுன் எனும் இப்பெண் கொள்ளுபிட்டி டீன்ஸ்டன் பிளேஸிலுள்ள வணிக நிலையமொன்றிலிருந்து கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். எனினும் இச்சிகரெட்டுகளை சுமத்தப்பட்டவர் தனது சொந்தப் பாவனைக்காகவே வைத்திருந்தார் என அவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார். இறுதியில் நீதிவான் கனிஷ்க விஜேரட்ன 150,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
யான் சூ ஜுன் எனும் இப்பெண் கொள்ளுபிட்டி டீன்ஸ்டன் பிளேஸிலுள்ள வணிக நிலையமொன்றிலிருந்து கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். எனினும் இச்சிகரெட்டுகளை சுமத்தப்பட்டவர் தனது சொந்தப் பாவனைக்காகவே வைத்திருந்தார் என அவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார். இறுதியில் நீதிவான் கனிஷ்க விஜேரட்ன 150,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Thursday 15 March 2012
டான் யாழ். ஒளியில் பார்வைகள்
டான் யாழ்.ஒளியில் வெள்ளிக்கிழமை (16-03-2012) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் என்ன கருதுகின்றார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.
http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ அல்லது நேரலையில் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை (16 - 03- 2012 ) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் 12 மணிவரை (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 ) தொலைபேசியூடாக அழைப்பதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம்.
இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977
http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ அல்லது நேரலையில் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை (16 - 03- 2012 ) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் 12 மணிவரை (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 ) தொலைபேசியூடாக அழைப்பதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம்.
இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977
இலங்கையில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா முயலுகின்றது
இலங்கையில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனிவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.
நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிரார்த்தனைகளை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூகம் செயற்படக்கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதுத் தொடர்பாக கேசரிக்கு தொடர்ந்து கூறுகையில்:
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு நாட்டை மீண்டும் சீரழிக்கும் பிரேரணையை ஆதரித்து பேசி வருகின்றது. எவ்வாறாயினும் புலிகள் இலங்கையில் ஒழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இவைகளுக்கு இடையில் ஒற்றுமையும் நிரந்தர சமாதானமும் ஏற்பட்டுள்ளது.
இதனை சீர்குலைக்கும் வகையிலேயே அமெரிக்காவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பித்துள்ள அமெரிக்கா அதன் ஊடாக இலங்கை இராணுவத்தை சர்வதேச விசாரணைகளை பொறிமுறைக்குள் சிக்க வைத்து தண்டனைகளை வழங்கவே முயற்சிக்கின்றது. புலிகளை அழித்திருக்காவிட்டால் இன்று இலங்கை இவ்வாறான சவால்களை ஒரு போதும் எதிர்கொண்டிருக்காது.
எவ்வாறாயினும் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவர சூழலை நாட்டில் ஏற்படுத்த அமெரிக்காவோ கூட்டமைப்போ முயற்சிக்கக்கூடாது. தேசிய பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று உள்ளது. அதே போன்று நீதிமன்ற கட்டமைப்பு ஒன்றும் உள்ளது. எனவே ஜெனிவாவில் பிரேரணையைக் கொண்டு வந்து உள்நாட்டு சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டியதில்லை என்றார். ___
நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிரார்த்தனைகளை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூகம் செயற்படக்கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதுத் தொடர்பாக கேசரிக்கு தொடர்ந்து கூறுகையில்:
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு நாட்டை மீண்டும் சீரழிக்கும் பிரேரணையை ஆதரித்து பேசி வருகின்றது. எவ்வாறாயினும் புலிகள் இலங்கையில் ஒழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இவைகளுக்கு இடையில் ஒற்றுமையும் நிரந்தர சமாதானமும் ஏற்பட்டுள்ளது.
இதனை சீர்குலைக்கும் வகையிலேயே அமெரிக்காவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பித்துள்ள அமெரிக்கா அதன் ஊடாக இலங்கை இராணுவத்தை சர்வதேச விசாரணைகளை பொறிமுறைக்குள் சிக்க வைத்து தண்டனைகளை வழங்கவே முயற்சிக்கின்றது. புலிகளை அழித்திருக்காவிட்டால் இன்று இலங்கை இவ்வாறான சவால்களை ஒரு போதும் எதிர்கொண்டிருக்காது.
எவ்வாறாயினும் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவர சூழலை நாட்டில் ஏற்படுத்த அமெரிக்காவோ கூட்டமைப்போ முயற்சிக்கக்கூடாது. தேசிய பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று உள்ளது. அதே போன்று நீதிமன்ற கட்டமைப்பு ஒன்றும் உள்ளது. எனவே ஜெனிவாவில் பிரேரணையைக் கொண்டு வந்து உள்நாட்டு சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டியதில்லை என்றார். ___
இலங்கை தொடர்பில் ஐநா சபைக்குத் தகவல் வழங்க எதிர்கட்சியில் இரு ஒற்றர்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு பிரதிநிதிகள் வேறு வடிவத்தில் இலங்கைக்குள் நுழைந்துள்ளார்கள் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இராஜதந்திரமற்ற நிலையில் இலங்கை வந்துள்ள இவர்களுக்கு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இலங்கை குறித்த தகவல்களை வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டுக்கு மேலும் அபகீர்த்தியை ஏற்படுத்த அவர்கள் முனைவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை குறித்து தகவல் வழங்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், அவ்வாறு தண்டனை வழங்கினால் அதுவும் மனித உரிமை மீறல் என சர்வதேசத்திற்கு அவர்கள் பிரச்சாரம் செய்துவிடுவார்கள் என குறிப்பிட்டார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு எதிர்க்கவில்லை எனவும் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மனித உரிமை கவுன்ஸிலில் பிரேரணை முன்வைக்கப்பட்டதையே எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரிந்துரைகளை நிறைவேற்றுவது எப்படி? அதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு? கண்காணிப்பது யார்? என்பது குறித்து தீர்மானிப்பது இலங்கையே தவிற சர்வதேச சமூகம் இல்லை என பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
இராஜதந்திரமற்ற நிலையில் இலங்கை வந்துள்ள இவர்களுக்கு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இலங்கை குறித்த தகவல்களை வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டுக்கு மேலும் அபகீர்த்தியை ஏற்படுத்த அவர்கள் முனைவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை குறித்து தகவல் வழங்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், அவ்வாறு தண்டனை வழங்கினால் அதுவும் மனித உரிமை மீறல் என சர்வதேசத்திற்கு அவர்கள் பிரச்சாரம் செய்துவிடுவார்கள் என குறிப்பிட்டார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு எதிர்க்கவில்லை எனவும் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மனித உரிமை கவுன்ஸிலில் பிரேரணை முன்வைக்கப்பட்டதையே எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரிந்துரைகளை நிறைவேற்றுவது எப்படி? அதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு? கண்காணிப்பது யார்? என்பது குறித்து தீர்மானிப்பது இலங்கையே தவிற சர்வதேச சமூகம் இல்லை என பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
6.4 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றவாளிக்கு மரண தண்டனை!
6.4 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கிரிவல முதலிகே சமிந்த எனப்படும் நபருக்கே நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2007 மார்ச் 14ம் திகதி பேலியகொடையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேபநபர் மீது, 6.4 கிராம் ஹெரோனியை தன்வசம் வைத்திருந்து போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட விசாரணையின் பின் சந்தேகநபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன மரண தண்டனை விதித்தார்.
மேலும் இந்த வழக்கில் பொய் சாட்சி கூறிய ஜூட் வசந்த என்பவருக்கு 20 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை விதித்தார்.
அத்துடன் ஜூட் வசந்தவிற்கு 1,50,000 ரூபா தண்டப்பணம் அறவிட்ட நீதிபதி அதனை செலுத்தத் தவறின் மேலதிக ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளித்தார்.
அரசியல் நோக்கம் கொண்ட காணொளி - சனல் 4 ஆவணப்பட விமர்சனம்
இலங்கை குறித்த சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியிடப்பட்ட ஒன்று என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளி மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றது என அவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட காணொளிகளில் சரத் பொன்சேகா குறித்து கூறப்பட்டதாகவும் இம்முறை காணொளியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் ஆகியோர் குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளதாகவும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் சனல் 4வின் அரசியல் நோக்கம் தெளிவாவதாகவும் ரஜீவ் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளி மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றது என அவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட காணொளிகளில் சரத் பொன்சேகா குறித்து கூறப்பட்டதாகவும் இம்முறை காணொளியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் ஆகியோர் குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளதாகவும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் சனல் 4வின் அரசியல் நோக்கம் தெளிவாவதாகவும் ரஜீவ் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வுக்கு மனித உரிமை கவுன்ஸில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - TNA விசேட அறிக்கை
இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்ஸில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறியுள்ளதாகவும் இது தொடர்பில் ஐநா மனித உரிமை கவுன்ஸில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் வேண்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போது இடம்பெறும் வன்முறைகள் பழைய குழப்பமான சூழ்நிலையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், அமைதியை ஏற்படுத்த காலம் தேவை என அரசாங்கம் கூறிவருவதாகவும் ஆனால் வருட காலங்களாக இதையே தொடர்ச்சியாக இலங்கை கூறி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால் இலங்கையில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இலங்கை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் ஆங்கில வடிவம் கீழே...
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறியுள்ளதாகவும் இது தொடர்பில் ஐநா மனித உரிமை கவுன்ஸில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் வேண்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போது இடம்பெறும் வன்முறைகள் பழைய குழப்பமான சூழ்நிலையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், அமைதியை ஏற்படுத்த காலம் தேவை என அரசாங்கம் கூறிவருவதாகவும் ஆனால் வருட காலங்களாக இதையே தொடர்ச்சியாக இலங்கை கூறி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால் இலங்கையில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இலங்கை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் ஆங்கில வடிவம் கீழே...
இலங்கைக்கு எதிரான தீர்மானம்; இந்தியா ஆதரிக்க தவறினால் மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ்: மு.கருணாநிதி
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிடின், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்றும் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கையில் உச்சகட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தான் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து முழுமையாக தவறிவிட்டது திமுக என்ற குற்றச்சாட்டு இந்த நிமிடம் வரை வலுவாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உரத்த குரல் எழுப்பி வருகிறது.
நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் தொடர்ந்தும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக செயற்பட மாட்டோம், நட்பு உள்ளது, வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அது பாதிக்கப்படக் கூடாது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும்.
இருப்பினும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு இந்தியா செய்த துரோகமாகவே திமுக கருதும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தீர்க்கமானதொரு முடிவை எடுப்போம்' என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்றும் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கையில் உச்சகட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தான் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து முழுமையாக தவறிவிட்டது திமுக என்ற குற்றச்சாட்டு இந்த நிமிடம் வரை வலுவாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உரத்த குரல் எழுப்பி வருகிறது.
நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் தொடர்ந்தும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக செயற்பட மாட்டோம், நட்பு உள்ளது, வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அது பாதிக்கப்படக் கூடாது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும்.
இருப்பினும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு இந்தியா செய்த துரோகமாகவே திமுக கருதும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தீர்க்கமானதொரு முடிவை எடுப்போம்' என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இன்று அதிகாலை 19கிலோகிராம் கஞ்சா பொதிகளுடன் காரின் சாரதி கைது
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று அதிகாலை 19கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளை கடத்திச் சென்ற காரொன்றினை பொலிஸார் மடக்கி பிடித்துள்ள அதேவேளை, காரின் சாதியையும் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்கஞ்சா பொதிகள் தனமல்வில பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்கஞ்சா பொதிகள் தனமல்வில பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு பிடியாணை
கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐயூப் கானுக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பாக முக்கிய சாட்சியான இவர், ஆறு தடவைகள் நீதிமன்றுக்கு சமுகமளிக்காமையினாலேயே பகிரங்க பிடியாணையை யாழ். மேல் நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஆறு தடவைகள் யாழ். மேல் நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டும் மன்றுக்கு ஆஜராகாமலும் அதற்கான காரணம் குறிப்பிடாமையினாலுமே நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பாக முக்கிய சாட்சியான இவர், ஆறு தடவைகள் நீதிமன்றுக்கு சமுகமளிக்காமையினாலேயே பகிரங்க பிடியாணையை யாழ். மேல் நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஆறு தடவைகள் யாழ். மேல் நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டும் மன்றுக்கு ஆஜராகாமலும் அதற்கான காரணம் குறிப்பிடாமையினாலுமே நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.
சட்டவிரோதமாக நீதி அமைச்சின் பெயர் பலகையை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நீதி அமைச்சின் பெயர் பலகையை சட்டவிரோதமான முறையில் வாகனங்களில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தற்போது வெளிநாடு சென்றுள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோனுக்கு அறிவித்துள்ளார்.
நீதி அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள வாகனங்களைத் தவிர பெயர் பலகையை முறைகேடாக பாவித்து வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் கோரியுள்ளார்.
இத்தகவலை நாடு முழுவதுமுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் சில தனியார் வாகனங்களில் நீதி அமைச்சின் பெயர் பலகை காணப்படுவதாக தெரியவந்ததுள்ளது. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதி அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் நீதி அமைச்சின் பெயர் பலகையை சட்டவிரோதமான முறையில் பல தனியார் வாகனங்களில் பயன்படுத்துவதாக நீதி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
நீதி அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள வாகனங்களைத் தவிர பெயர் பலகையை முறைகேடாக பாவித்து வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் கோரியுள்ளார்.
இத்தகவலை நாடு முழுவதுமுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் சில தனியார் வாகனங்களில் நீதி அமைச்சின் பெயர் பலகை காணப்படுவதாக தெரியவந்ததுள்ளது. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதி அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் நீதி அமைச்சின் பெயர் பலகையை சட்டவிரோதமான முறையில் பல தனியார் வாகனங்களில் பயன்படுத்துவதாக நீதி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
Wednesday 14 March 2012
கடந்த தேர்தலின்போது பிரான்ஸ் அதிபர் சர்கோசி கடாபியிடம் ரூ.325 கோடி பெற்றார்: பரபரப்பு புகார்
கடந்த தேர்தலின் போது பிரான்ஸ் அதிபர் சர்கோசி கடாபியிடம் ரூ.325 கோடி பெற்றதாக பரபரப்பு புகார் வெளியாகி உள்ளது. லிபியாவில் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்துக்கு 'நேட்டோ' படையில் இடம் பெற்றிருந்த பிரான்ஸ் உதவி செய்தது.
அப்போது கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு அதிபர் கடாபி பண உதவி செய்தார் என அவரது மகன் சயீப்-அல்-இஸ்லாம் தெரிவித்தார். இதை அதிபர் சர்கோசியின் உதவியாளர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். இந்த நிலையில் பிரான்சில் இருந்து வெளியாகும் மீடியா பார்ட் என்ற ஆன்லைன் பத்திரிகை சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது.
அதில் கொல்லப்பட்ட லிபியா அதிபர் மும்மர் கடாபியிடம் நிகோலஸ் சர்கோசி கடந்த தேர்தலின் போது பிரசாரத்துக்காக ரூ.325 கோடி நிதி உதவி பெற்றார். கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பரில் இப்பணம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது சர்கோசி உள்துறை மந்திரியாக இருந்தார். இப்பணத்தை பெற சர்கோசியும் அவரது உதவியாளர்களும் லிபியா சென்று இருந்தனர்.
இது உண்மையா? இல்லையா? என கேள்வி எழுப்பி இருந்தது. இதை அதிபர் சர்கோசி மறுத்துள்ளார். இது குறித்து அவரது செய்தி தொடர் பாளர் பிராங்க் லூவியர் அளித்த பேட்டியில், இந்த குற்றச்சாட்டு முட்டாள் தனமானது. மிகவும் அபத்தமான பொய் செய்தி என மறுத்தார். கடந்த 2005 அக்டோபரில்தான் சர்கோசி லிபியா சென்றார். 2006-ம் ஆண்டு செல்லவில்லை. மீடியா பார்ட் ஆன்லைன் பத்திரிகைக்கு இது பற்றிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி என்பது குறித்து நீதி விசா ரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு அதிபர் கடாபி பண உதவி செய்தார் என அவரது மகன் சயீப்-அல்-இஸ்லாம் தெரிவித்தார். இதை அதிபர் சர்கோசியின் உதவியாளர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். இந்த நிலையில் பிரான்சில் இருந்து வெளியாகும் மீடியா பார்ட் என்ற ஆன்லைன் பத்திரிகை சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது.
அதில் கொல்லப்பட்ட லிபியா அதிபர் மும்மர் கடாபியிடம் நிகோலஸ் சர்கோசி கடந்த தேர்தலின் போது பிரசாரத்துக்காக ரூ.325 கோடி நிதி உதவி பெற்றார். கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பரில் இப்பணம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது சர்கோசி உள்துறை மந்திரியாக இருந்தார். இப்பணத்தை பெற சர்கோசியும் அவரது உதவியாளர்களும் லிபியா சென்று இருந்தனர்.
இது உண்மையா? இல்லையா? என கேள்வி எழுப்பி இருந்தது. இதை அதிபர் சர்கோசி மறுத்துள்ளார். இது குறித்து அவரது செய்தி தொடர் பாளர் பிராங்க் லூவியர் அளித்த பேட்டியில், இந்த குற்றச்சாட்டு முட்டாள் தனமானது. மிகவும் அபத்தமான பொய் செய்தி என மறுத்தார். கடந்த 2005 அக்டோபரில்தான் சர்கோசி லிபியா சென்றார். 2006-ம் ஆண்டு செல்லவில்லை. மீடியா பார்ட் ஆன்லைன் பத்திரிகைக்கு இது பற்றிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி என்பது குறித்து நீதி விசா ரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அதிகாலை கம்பஹாவுக்கு திடீர் விஜயம்! வீதி அபிவிருத்திகளை நேரில் பார்வை -
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கம்பஹா பிரதேசத்துக்கு அதிகாலை திடீர் விஜயம் ஒன்றை மெற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை பரிசீலித்தார்.
இதன்போது அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கம்பஹா - ஒருதொட்ட வீதியில் கறுப்புப் பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உடற்பயிற்சிக்கான நடைபாதையை ஜனாதிபதி பார்வையிட்டார்.
முன்னறிவித்தலின்றி திடீரென அங்கு சென்ற ஜனாதிபதி நேற்றைய தினத்தில் (13) தமது காலைவேளை உடற்பயிற்சிகளை அங்கு மேற்கொண்டார்.
சுமார் நான்கு (04) கிலோ மீட்டர் நீளமான இந்த உடற் பயிற்சி நடைபாதை ஊருவல் ஓயாவிற்கு இருபக்கமாக உள்ள பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டு ள்ளது. இந்நடைபாதையை சுற்றி சுமார் 1500 தாவர வகைகளும் வளர்க்கப்பட்டு ள்ளன.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த உடற்பயிற்சி நடைபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 32 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.
தேகாரோக்கியமிக்க பிரஜைகளை உருவாக்கும் ‘மஹிந்த சிந்தனை திட்டத்தின்’ கீழ் நாடு முழுவதிலும் முக்கிய இடங்களில் இவ்வாறான உடற்பயிற்சி நடைபாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் இவ்வாறான நடைபாதைகள் இரண்டு கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதன்போது ஜனாதிபதி அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடமும் கலந்துரையாடினார்.
இதன்போது அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கம்பஹா - ஒருதொட்ட வீதியில் கறுப்புப் பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உடற்பயிற்சிக்கான நடைபாதையை ஜனாதிபதி பார்வையிட்டார்.
முன்னறிவித்தலின்றி திடீரென அங்கு சென்ற ஜனாதிபதி நேற்றைய தினத்தில் (13) தமது காலைவேளை உடற்பயிற்சிகளை அங்கு மேற்கொண்டார்.
சுமார் நான்கு (04) கிலோ மீட்டர் நீளமான இந்த உடற் பயிற்சி நடைபாதை ஊருவல் ஓயாவிற்கு இருபக்கமாக உள்ள பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டு ள்ளது. இந்நடைபாதையை சுற்றி சுமார் 1500 தாவர வகைகளும் வளர்க்கப்பட்டு ள்ளன.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த உடற்பயிற்சி நடைபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 32 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.
தேகாரோக்கியமிக்க பிரஜைகளை உருவாக்கும் ‘மஹிந்த சிந்தனை திட்டத்தின்’ கீழ் நாடு முழுவதிலும் முக்கிய இடங்களில் இவ்வாறான உடற்பயிற்சி நடைபாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் இவ்வாறான நடைபாதைகள் இரண்டு கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதன்போது ஜனாதிபதி அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடமும் கலந்துரையாடினார்.
இந்திய தென்பிராந்திய பிரதம கட்டளைத் தளபதி யாழ் விஜயம் !
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய தென்பிராந்திய பிரதம கட்டளைத் தளபதி லெப். ஜெனரல் ஏ.கே.சிங் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
யாழ் விஜயத்தின் போது அவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது வடமாகாண ஆளுநர் இந்திய தென்பிராந்திய பிரதம கட்டளைத் தளபதிக்கு ஞாபகச் சின்னம் ஒன்றையூம் பரிசாக வழங்கினார்.
யாழ் விஜயத்தின் போது அவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது வடமாகாண ஆளுநர் இந்திய தென்பிராந்திய பிரதம கட்டளைத் தளபதிக்கு ஞாபகச் சின்னம் ஒன்றையூம் பரிசாக வழங்கினார்.
இலங்கை மீதான பிரேரணை குறித்து இந்தியா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லையாம்- எஸ்.எம்.கிருஸ்ணா
ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை குறித்து இந்தியா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய மாநிலங்களவையில் இன்று (14) விசேட உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியா, இலங்கை குறித்து ஜெனீவாவில் இன்னும் கருத்து வெளியிடவில்லை எனவும் இலங்கை குறித்து ஏதாவது தீர்மானம் எடுத்தால் அது உடனடியாக பாராளுமன்றில் அறிவிக்கப்படும் என கிருஸ்ணா தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு அமெரிக்கா பிரேரணை ஊடாக கோரியுள்ளதாக சுட்டிக்காட்டிய கிருஸ்ணா, ஆணைக்குழு பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டது போன்று தேசிய மனித உரிமை வேலைத்திட்டம், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் இறுதிக் கட்ட யுத்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய இராணுவ விசாரணை குழு என்பவற்றை இலங்கை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியல் தீர்வை காண தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்தியா பல திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் மாநிலங்களவையில் எஸ்.எம்.கிருஸ்ணா பாடிய புராணத்தையே பாடிச் சென்றார்.
இந்திய மாநிலங்களவையில் இன்று (14) விசேட உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியா, இலங்கை குறித்து ஜெனீவாவில் இன்னும் கருத்து வெளியிடவில்லை எனவும் இலங்கை குறித்து ஏதாவது தீர்மானம் எடுத்தால் அது உடனடியாக பாராளுமன்றில் அறிவிக்கப்படும் என கிருஸ்ணா தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு அமெரிக்கா பிரேரணை ஊடாக கோரியுள்ளதாக சுட்டிக்காட்டிய கிருஸ்ணா, ஆணைக்குழு பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டது போன்று தேசிய மனித உரிமை வேலைத்திட்டம், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் இறுதிக் கட்ட யுத்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய இராணுவ விசாரணை குழு என்பவற்றை இலங்கை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியல் தீர்வை காண தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்தியா பல திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் மாநிலங்களவையில் எஸ்.எம்.கிருஸ்ணா பாடிய புராணத்தையே பாடிச் சென்றார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் பிரதமரின் பதிலில் திருப்தி இல்லை - ஜெயலலிதா
இலங்கை தமிழர் விவகாரத்தில் பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை விவகாரத்தில் பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது என்று கூறிய ஜெயலலிதா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தொடர்ந்து அ.தி.மு.க ஆதரிக்கும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை விவகாரத்தில் பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது என்று கூறிய ஜெயலலிதா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தொடர்ந்து அ.தி.மு.க ஆதரிக்கும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற செல்வோருக்கு ஒசுசலவில் இலவச மருந்து
அரச வைத்தியசாலைகளின் உதவியாளர் ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிநிறுத்தம் காரணமாக அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற வரும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் (ஒசுசல) இலவசமாக வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பணிநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பணிநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பசறையில் இளைஞர் கத்தியால் குத்திக் கொடூரக் கொலை
பதுளை - பசறை பிரதேச சபைக்கு முன்னால் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று (13) இரவு 09.55 அளவில் இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (13) இரவு 09.55 அளவில் இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா - மீபிலிமான பகுதியில் புதையல் தோண்டிய இருவர் கைது
நுவரெலியா - மீபிலிமான பகுதி வீடொன்றில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது நேற்று (13) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (14) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது நேற்று (13) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (14) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நல்லிணக்கம் இன்றேல் இலங்கையில் மீண்டும் மோதல் வெடிக்குமாம் - அமெரிக்கா எச்சரிக்கை
ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் போர்க் குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால், இலங்கையில் மீண்டும் மோதல் வெடிக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
சர்வதேச செய்தி நிலையமொன்றுக்கு ரொபேட் ஓ பிளேக் இது குறித்து கூறியுள்ளதாகவது,
இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் ஏற்படும்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீளத்தோற்றம் பெற்ற கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள்.
இலங்கையிலும் இதேபோன்ற நிலையை நாம் எதிர்பார்க்கக் கூடும்.
மேலும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது. ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.
இந்நிலையில், தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறு ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
சர்வதேச செய்தி நிலையமொன்றுக்கு ரொபேட் ஓ பிளேக் இது குறித்து கூறியுள்ளதாகவது,
இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் ஏற்படும்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீளத்தோற்றம் பெற்ற கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள்.
இலங்கையிலும் இதேபோன்ற நிலையை நாம் எதிர்பார்க்கக் கூடும்.
மேலும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது. ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.
இந்நிலையில், தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறு ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
மெகசின் கலவரத்தில் கைதான 46 கைதிகளுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு
வெலிக்கடை புதிய மெகசின் சிறையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் பின் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 46 கைதிகளுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சிறை வைக்கப்பட்டுள்ள குறித்த 46 கைதிகளும் இன்று (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்களுக்கு எதிரான சாதாரண சாட்சி இல்லை என்பதால் அவர்களுக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.
எனினும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச் சொத்து சேதத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஏற்படுத்தியுள்ள சொத்து சேதம் 25000 ரூபாவிற்கும் அதிகம் என்பதால் பொது சொத்து சேத சட்டத்தின்படி அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாதென குற்றத்தடுப்புப் பிரிவினர் கேட்டுக் கொண்டனர்.
இக் கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரஹர்சா ரணசிங்க சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவித்தார்.
இதன்படி சந்தேநகபர்களை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
சிறை வைக்கப்பட்டுள்ள குறித்த 46 கைதிகளும் இன்று (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்களுக்கு எதிரான சாதாரண சாட்சி இல்லை என்பதால் அவர்களுக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.
எனினும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச் சொத்து சேதத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஏற்படுத்தியுள்ள சொத்து சேதம் 25000 ரூபாவிற்கும் அதிகம் என்பதால் பொது சொத்து சேத சட்டத்தின்படி அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாதென குற்றத்தடுப்புப் பிரிவினர் கேட்டுக் கொண்டனர்.
இக் கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரஹர்சா ரணசிங்க சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவித்தார்.
இதன்படி சந்தேநகபர்களை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
Tuesday 13 March 2012
அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேசோலைன் (நம்மூர் பெட்ரோல்) உள்ளிட்ட எரிபொருட்களின் விலையுயர்வு காரணமாக, அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில், விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களிடையே, அதிபர் மீது உள்ள மதிப்பு மற்றும் ஒப்பீடு குறித்து அந்நாட்டு பத்திரிகைகள் அவ்வப்போது கருத்துக்கணிப்புகள் நடத்தி வருகின்றன. அன்படி, மார்ச் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான காலத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
வாஷிங்டன் போஸ்ட் - ஏபிசி நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள முடிவுகளில், ஒபாமாவுக்கு ஆதரவாக 46 சதவீதம் பேரும், 50 சதவீதம் எதிராக மதிப்பிட்டுள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ் - சிபிஎஸ் நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள முடிவுகளில், 41 சதவீதத்தினர் (கடந்த மாதம் 50 சதவீதம்) மட்டுமே, ஒபாமாவுக்கு ஆதரவாக மதிப்பிட்டுள்ளனர். கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 41 சதவீதமாக இருந்த ஒபாமாவுக்கு எதிரான மதிப்பீடு, நடப்பு மாதத்தில், 47 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேஸோலைன் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையுயர்வு காரணமாகவே, மக்களுக்கு அதிபர் ஒபாமா மீதான் மதிப்பீடு குறைந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் போஸ்ட் - ஏபிசி நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள முடிவுகளில், ஒபாமாவுக்கு ஆதரவாக 46 சதவீதம் பேரும், 50 சதவீதம் எதிராக மதிப்பிட்டுள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ் - சிபிஎஸ் நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள முடிவுகளில், 41 சதவீதத்தினர் (கடந்த மாதம் 50 சதவீதம்) மட்டுமே, ஒபாமாவுக்கு ஆதரவாக மதிப்பிட்டுள்ளனர். கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 41 சதவீதமாக இருந்த ஒபாமாவுக்கு எதிரான மதிப்பீடு, நடப்பு மாதத்தில், 47 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேஸோலைன் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையுயர்வு காரணமாகவே, மக்களுக்கு அதிபர் ஒபாமா மீதான் மதிப்பீடு குறைந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது: பிரணாப் முகர்ஜி சூசக தகவல்
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இம் மாத இறுதியில் இது ஓட் டெடுப்புக்கு வருகிறது. இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று டெல்லி மேல்சபையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதற்கு நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பதில் அளிக்கையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பதை சூசகமாக தெரிவித்தார். ஐ.நா.சபையில் எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிக்க கூடாது என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. இந்த விஷயத்தில் முடிவு எடுக்க கால அவகாசம் உள்ளது என்று கூறினார்.
பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் இந்தியாவின் நிலை குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுகிறார்.
இதற்கு நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பதில் அளிக்கையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பதை சூசகமாக தெரிவித்தார். ஐ.நா.சபையில் எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிக்க கூடாது என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. இந்த விஷயத்தில் முடிவு எடுக்க கால அவகாசம் உள்ளது என்று கூறினார்.
பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் இந்தியாவின் நிலை குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுகிறார்.
Subscribe to:
Posts (Atom)























