செவ்வாய், 16 மார்ச், 2010

கிளிநொச்சி, முல்லைத்தீவு; தேங்காய் எண்ணெய் ஆலைகள்

கிளிநொச்சி,முல்லைத்தீவு,அளம்பில் மற்றும் பளை ஆகிய இடங்களில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இதற்காக 30மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.அரச-தனியார் துறையினரின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல் உருப்பெறுவதாக அமைச்சர் டீ.எம்.ஜயரத்ன தெரிவித்திருக்கிறார்.

தேசிய தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இது தொடர்பான திட்டத்தை மேற்கொள்ளும்.

10.பாரிய அளவிலான எண்ணெய் உற்பத்தி தொகுதிகள் அமைக்கப்படும்.20.மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் நாளாந்தம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 30,000.குடும்பங்கள் நேரடியாகவும்,மறை முகமாகவும் தொழில் வாய்ப்புக்களையும் பெறுவர்.