செவ்வாய், 3 மே, 2011

ஒட்டுசுட்டானில் ஒழித்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சுமார் 20 அடி ஆழமுடைய பாழடைந்த கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை வட மாகாண விசேட சோதனைப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 21, 60 மில்லி மீற்றர் குண்டு ஒன்று மற்றும் கைக்குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அடுத்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.