ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அம்பாறையில் பொலிஸ் அதிகாரி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அம்பாறையில் மஹாஓயா 65ம் சந்தியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் துணை அதிகாரி (Sub-Inspector(SI)) ஒருவரும் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவரும் (Assistant Superintendent of Police (ASP)) ஒருவருக்கு ஒருவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயங்களுடன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவரும் (Assistant Superintendent of Police (ASP)) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.