செவ்வாய், 10 ஜனவரி, 2012

சஜித்தின் திட்டத்திற்கு கட்சியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் : திஸ்ஸ

புதிய அங்கத்தவர்களை இணைப்பது உட்பட கட்சி தொடர்பான அனைத்து செயற்திட்டங்களுக்கும் அவை அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் கட்சியின் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என ஐ.தே.க.பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

ஒரு லட்சம் புதிய அங்கத்தவர்களை இணைக்கப்போவதாக ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறினார்.

பிரதேச அமைப்பாளர்களை முதலில் நியமனம் செய்து பின்னர், கட்சியின் இணை அமைப்புகளுக்கன அமைப்பாளர்களை நியமிப்பதற்கு கட்சி திட்டமிட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

'அதன்பின்னர் கட்சிக்கு அங்கத்தவர்களை திரட்டுதல் உட்பட அமைப்பாளர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் வகுக்கப்படும்.
கட்சிக்கு அங்கத்தவர்களை சேர்ப்பது மோசமான நடவடிக்கை அல்ல. ஆனால் அதற்கு முறையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்' என அவர் கூறினார்.