பாதசாரிகள் பாதையைக் கடக்கும் போது வீதி விபத்துக்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு பொலிஸ் தலைமையகம் பல சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. பாதசாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், வீதி விபத்துக்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகவும் பாதசாரிகள் பாதையை மஞ்சள் கோட்டினூடாகவே கடக்க வேண்டுமென்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவற்றை மீறி வேறு இடங்களில் பாதையைக் கடக்க முயன்றால் அவரைக் கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.