லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்துள்ளது.
பிடிவிறாந்து விடுக்கப்பட்ட ஒரு சந்தேகநபரை கைது செய்யாதிருக்க குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரிடம் இருந்து 12000 பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளார்.
பொலன்னறுவை - புலஸ்த்திகம பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் போது அவர் இந்த லஞ்சத்தை பெற்றுள்ள நிலையில் அவருக்கு எதிரான 4 குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 6 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லஞ்சம் வழங்கிய நபருக்கு நீதிமன்றம் 12000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
பிடிவிறாந்து விடுக்கப்பட்ட ஒரு சந்தேகநபரை கைது செய்யாதிருக்க குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரிடம் இருந்து 12000 பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளார்.
பொலன்னறுவை - புலஸ்த்திகம பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் போது அவர் இந்த லஞ்சத்தை பெற்றுள்ள நிலையில் அவருக்கு எதிரான 4 குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 6 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லஞ்சம் வழங்கிய நபருக்கு நீதிமன்றம் 12000 ரூபா அபராதம் விதித்துள்ளது.