சனி, 27 அக்டோபர், 2012

இந்த வருடம் 'தேசத்திற்கு நிழல் தேசிய மர நடுகை செயற்திட்டம் நவம்பர் 15ஆம் திகதி!

இந்த வருடம் 'தேசத்திற்கு நிழல் ' தேசிய மர நடுகை செயற்திட்டம்   2012 நவம்பர் மாதம் 15ஆம் திகதி சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள், மாகாண சபைகள், மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகங்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களிலும் ஆரம்பித்து வைக்கப்படும்.

 2010 நவம்பர்  15ந் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65வது பிறந்த தினத்தன்று 10 லட்சம் மர நடுகை திட்டத்துடன்   இந்த 'தேசத்திற்கு நிழல்'  தேசிய மர நடுகை செயற்திட்டம் ஆரம்பமானது.

இதன் வெற்றியால் இதனை 2010ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ந்தும் ஒரு தேசிய வருடாந்த நிகழ்வாக மரநடுகை திட்டத்தை அமுல் நடாத்த உத்தேசிக்கப்பட்டது.

சுற்றாடல் அமைச்சர்  அநுர பிரயதர்ஷன யாபா வழங்கிய யோசனைக்கமைய அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.