வெள்ளி, 20 செப்டம்பர், 2013

இரு தடவைகள் சிந்தியுங்கள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்ல நீங்கள் தயாரா? யாழில் சுவரொட்டிகள்

தமிழ் தேசியகூட்டமைப்புக்கு வாக்களித்து  மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்ல நீங்கள் தயாரா? என்ற  சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுயநல வாத தமிழ்த் தேசிய இனவாதிகளின்  குடும்பங்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ. மீண்டும் இவர்களுக்கு நீங்கள்  வாக்களித்து விட்டு இந்த நாட்டில் வாழும் அப்பாவி உங்கள் பிள்ளைகளை நீங்கள் பலிகொடுக்க  தயாரா?

சிந்தியுங்கள் இவர்களின் இப்படியான பொய்யான கதைகளை நம்பி இந்த நாட்டில் 30 ஆண்டுகாலம் நடந்த யுத்தத்தால் எத்தனை அழிவுகள் எத்தனை ஆயிரம் பிள்ளைகளை பலிகொடுத்து விட்டம். அனால் இப்படி இருக்கும் போது இந்த கூட்டமைப்பினரும் இவர்கள் பிள்ளைகள் குடும்பங்கள்  இவளவு காலம்  எங்கே போய் இருந்தார்கள். இனியும் இந்த இனவாத சாதி வேறி பிடித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பை  நம்பி இவர்களுக்கு வாக்களித்து மீண்டும் அழிவு யுத்தத்திற்கு  நீங்கள் தயரா?

இரு தடவைகள் சிந்தியுங்கள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்ல நீங்கள் தயாரா?

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கா உங்கள் வாக்குகள்?

மேற்கண்டவாறு எழுதப்பட்ட சுவரொட்டிகள் பல இடங்களில் ஓட்டபட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.