எம்பிலிப்பிட்டிய செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் பெண்ணின் கணவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை (11) செவனகல, 700 பிரிவு வீடொன்றுக்கு வருகை தந்த நபர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
