சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை பிரஜை ஒருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

