சனி, 23 மே, 2020

மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் உயிலங்குளத்தில் இன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ்வியஜத்தின் போது முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி வல்பொல சரண தேரரையும் அமைச்சர் சந்தித்தார்.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உட்பட்ட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி வல்பொல சரண தேரர் தெரிவித்துள்ளார்.