இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சாதகமான முறையில் மீளாய்வு செய்யவுள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரி வேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.
டெயிலிமிரரிற்கு வழங்கிய விசேட பேட்டிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இந்த வாரம் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக நான்கு பேரைக் கொண்ட தூதுக் குழுவொன்று பிரஸல்லிற்கு பயணமாகவுள்ளதாகவும் வேர்னாட் சாவேஜ் குறிப்பிட்டார்.
திறைசேரிச் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர தலைமையில் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ்,வெளிவிவகாரச் செயலாளர் ரோமேஷ் ஜயசிங்க, நீதி அமைச்சுச் செயலாளர் சுகத கம்லத் ஆகியோரே பிரஸல்லிற்கு பயணமாகவுள்ளனர்.
டெயிலிமிரரிற்கு வழங்கிய விசேட பேட்டிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இந்த வாரம் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக நான்கு பேரைக் கொண்ட தூதுக் குழுவொன்று பிரஸல்லிற்கு பயணமாகவுள்ளதாகவும் வேர்னாட் சாவேஜ் குறிப்பிட்டார்.
திறைசேரிச் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர தலைமையில் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ்,வெளிவிவகாரச் செயலாளர் ரோமேஷ் ஜயசிங்க, நீதி அமைச்சுச் செயலாளர் சுகத கம்லத் ஆகியோரே பிரஸல்லிற்கு பயணமாகவுள்ளனர்.