திங்கள், 20 செப்டம்பர், 2010

பொலிஸாருக்கும் கஞ்சா விற்பனை குழுவினருக்கும் இடையே மோதல்

​மொனராகலை எத்திமலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் இடமொன்றை முற்றுகையிட சென்ற பொலிஸாருக்கும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற கைகலப்பில் 3 பொலிஸார் உட்பட மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த குழுவினரை கைது செய்ய பொலிஸார் முற்பட்ட வேளை குறிப்பிட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபலை தாக்கியதுடன் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறிப்பிட்ட நபர் காயமடைந்துள்ளார்.

தற்போது 3 பொலிஸார் உட்பட மேலும் காயமடைந்த நபர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.