வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்றும் கூடுகிறது

சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது. இந்த விசாரணைகள் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல குறிப்பிட்டார். கடந்த 13ம் திகதி கூடிய இரண்டாம் இராணுவ நீதிமன்றம் தொடர்ச்சியாகக் கூடுமென அறிவிக்கப்பட்டது.

இராணுவத்தில் இருக்கும் போது ஆயுதக் கொள்வனவு மோசடி தொடர்பில் விசாரணை செய்ய இரண்டாவது இராணு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.