வெள்ளி, 17 செப்டம்பர், 2010

தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான விரைவில் தொகுதி நிர்ணயம்

தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான சட்ட மூல ஆவணம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொகுதி நிர்ணய திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமென அவர் தெரிவித்தார். தொகுதி நிர்ணயம் தொடர்பான விபரங்களும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் தொகை, உறுப்பினர்கள் தொகை, உள்ளூராட்சி, தேர்தல் ஆணையாளரின் பிரதிநிதி, அமைச்சரின் பிரநிதிதி ஆகியோர் கொண்ட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி மாவட்ட மட்டத்தில் தொகுதி நிர்ணயம் தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.