உள்நாட்டு வெளிநாட்டு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் அதிகமானவர்களது பாராட்டினைப் பெற்றுள்ள மன்னார் கட்டுக்கரைக் குளத்தை எதிர்கால சந்ததியினருக்காக பேணி பாதுகாப்பதற்கும், உலக மரபுரிமைகளின் பட்டியலில் சேர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய மட்டத்திலான பாதுகாப்புச் செயற்திட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுக்கரைக்குள பாதுகாப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ். எம். சந்திரசேன தலைமையில் தேசிய ஆலோசனை மற்றும் தொழிற்பாட்டுச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு கட்டுக்கரைக் குளக் கால்வாயின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்கு பிரதியமைச்சர் எஸ். எம். சந்திரசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.