வியாழன், 4 நவம்பர், 2010

தீபாவளியை முன்னிட்டு விசேட ரயில் சேவை

தீபாவளியை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ரயில் சேவை அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்தின் படி இன்றிலிருந்து நாளை மறுதினம் வரை கொழும்பு மற்றும் நாணுஓயாவிற்கு இடையில் விசேட ரயில் சேவை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை ஏனைய பிரதேசங்களிற்கும் மேலதிகமாக விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.