செவ்வாய், 7 ஜூன், 2011

சின்னவத்தையில் 18 வயது (சிறுமி) குடும்பப்பெண் சுருக்கிட்டு தற்கொலை

வெள்ளாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னவத்தை பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராறு காரணமாகவே குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

18 வயதான ஜீவன் ஜூலியா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தூக்கில் இருந்த போது நிலத்துக்கும் அவரது காலுக்கும் சிறிய இடைவெளியே காணப்பட்டதால் இது கொலையாகக் கூட இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதனால் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவரான ஜீவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.