செவ்வாய், 7 ஜூன், 2011

யாழ் சென்ற வான் இரு பஸ்களுடன் மோதி: 7 பேர் காயம்

சிலாபம் - கொழும்பு வீதிக்கு இடைப்பட்ட மாரவில பிரதேசத்தில் இன்றுகாலை 7 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதூண்டதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலில் கொழும்பில் இருந்து யாழ் சென்ற வான் தனியார் பஸ் ஒன்றுடன் மோதூண்டதாகவும் அதனால் வானில் பயணித்த அனைவரும் காயமுற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விபத்து நடைபெற்று சில விநாடிகள் முன்பு மோதூண்ட வானுடன் மற்றுமொரு பயணிகள் பஸ் மோதியுள்ளது.

இரு பஸ்சாரதிகளும் போட்டி போட்டு ஒன்றுக் கொன்றினை முந்திச் செல்ல முயற்சித்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமுற்றவர்களில் 6 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.