இலங்கைத் தமிழர்களின் இன்னல்களுக்கு தீர்வுகான தமிழக அரசியல்வாதிகள் கூறுவதைப் போல இலங்கைக்கு பொருளாதார கட்டுப்பாடு விதிக்கமுடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு பொருளாதார கட்டுப்பாடு விதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு பதிலாக சீனப் பொருளாதார நடவடிக்கைகள் இலங்கையில் பலம் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய மீனவர்களை தாக்குவதற்காக இலங்கைக் கடற்படைக்கு சீனா ஏற்கனவே உதவிகளை வழங்கி வருவதாகவும் இந்தியாவைவிட பாகிஸ்தான் இலங்கை உறவு சிறப்பாக காணப்படுவதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோர் வழக்கு குறித்து கவனம் கொள்ளுமாறும் வைகோ, மன்மோகன் சிங்கிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதன்போது வழக்கு குறித்து தான் உள்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தி கவனத்தில் கொள்ளுமாறு தெரிவிப்பதாக மன்மோகன் சிங் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் பின் வைகோ உள்துறை அமைச்சர் பி.சிதம்பரத்தினை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
