திங்கள், 26 செப்டம்பர், 2011

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் 75 பேர் கைது: 64 முறைப்பாடுகள்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களிடன் தொடர்புடைய 75 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களில் அனேகமானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அத்தோடு தேர்தல் செயலகத்திலிருந்து தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான 64 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.