திங்கள், 5 செப்டம்பர், 2011

திருமலையில் மர்ம மனிதன் பற்றிய எஸ். எம். எஸ். அனுப்பியவர் பொலிஸாரால் கைது

திருமலையில் மர்ம மனிதன் பற் றிய குறுஞ் செய்தி அனுப்பிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது நண்பர் ஒருவருக்குத் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் திருமலை நகருக்குள் மர்மமனிதன் ஊடுருவியுள்ளதாக குறுஞ் செய்தி (எஸ். எம். எஸ்) அனுப்பிய இளைஞன் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளதாக தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி சரித்த ஜயசுந்தர தெரிவித்தார்.

இவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இல. 117 பாலையூற்று ஜீவரட்ணம் ஜீவானந்தம் (வயது 27) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

குறுஞ் செய்தியைப் பெற்றவர் 119 க்கு அழைப்பு விடுத்து தகவல் கொடுக்கவே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.