புதன், 28 டிசம்பர், 2011

நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கைக்கு நீண்ட பயணம் தேவை - அவுஸ்திரேலியா

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கையில் வெகு தூரம் செல்ல வேண்டும் என அவுஸ்திரேலிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாரியா வம்வாகினோ தெரிவித்துள்ளார்.

குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் செயலில் இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அனேகர் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என மாரியா வம்வாகினோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மாரியா தலைமையிலான அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.