செவ்வாய், 13 மார்ச், 2012

ஜெனீவாவில் இந்தியா ஆதரவு வழங்காவிடின் இலங்கை சீனா நோக்கிச் செல்லுமாம்

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்காவிடின் அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிட்டால் இலங்கை சீனாவை நோக்கி நகரும் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார்.

எனினும் தென்னிந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்தியா இம்முறை ஜெனீவாவில் எவ்வாறான முடிவை எடுக்கும் என்று தெரியாமல் உள்ளது. ஆனால் தன்னைச் சுற்றி எதிரி நாடுகளை வைத்துக்கொண்டுள்ள இந்தியாவுக்கு இலங்கை மட்டுமே எவ்விதத் தொல்லையும் கொடுக்காமல் மிக நெருக்கமான நட்பு நாடாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.