புதன், 1 ஆகஸ்ட், 2012

குடிபோதையில் மோதல்: ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

வெலிக்கடை - புதிய கொலன்னாவ வீதி மொரகஸ்முல்ல பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் இருந்து இருவருக்கு இடையில் இன்று 1ம் திகதி அதிகாலை 1 மணியளவில் இம்மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் கத்திக் குத்துக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 44 வயதுடைய நபர் அதிகாலை 1.22 அளவில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து பொலிஸாராரின் கைதின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.