ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஈராக்கில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்: 52 பேர் பலி 250-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

ஈராக்கில் உள்ள பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் மார்கெட்டுகளை குறி வைத்து பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 52 பேர் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
 
தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மசூதி அருகே நடந்த மிக மோசமாக இரு கார் குண்டுவெடிப்பில் மட்டும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேசன் பகுதியில் நடந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இறந்துள்ளனர்.
 
ஆயில் கம்பெனி ஒன்றின் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் அங்கு வேலையில் சேருவதற்காக நின்றிருந்த பலர் உயிரிழந்தனர். இந்த மாதம் இதுவரை நடந்த தாக்குதலில் மட்டும் மொத்தம் 82 பேர் பலியாகியுள்ளனர்.