சனி, 8 செப்டம்பர், 2012

மூன்று மாகாணங்களிலும் பாரிய சம்பவங்களின்றி தேர்தல் வாக்க ளிப்பு.

மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் இதுவரை பாரிய இடையூறுகள் எதுவுமின்றி வாக்களிப்பு இடம்பெறுவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்னாயக்க தெரிவித்தார்.

நண்பகல் 12 மணிவரை அம்பாறையில் 30 சதவீதமானோரும், மட்டக்களப்பில் 20 சதவீதமானோரும் திருகோணமலையில் 20 சதவீதமானோரும் வாக்களித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் 25 சதவீதமானோரும் பொலன்னறுவையில் 35 சதவீதமானோரும் இரத்தினபுரியில் 25 சதவீதமானோரும் கேகாலையில் 23 சதவீதமானோரும் வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாகாணங்களிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.