செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் சாரதி, நடத்துனருக்கு புதிய சீருடை

பாடசாலைச் சேவையில் ஈடுபடும் பஸ்களில் கடமை புரியும் சாரதி மற்றும் நடத்துனருக்கு புதிய சீருடை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

போக்குவரத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் பொறுப்புணர்வுகளுக்கு அமைய இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.

செப்ரெம்பர் முதலாம் திகதி தொடக்கம் 100 புதிய பஸ்கள் பாடசாலை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் நிகழ்வு நாராஹென்பிட்டி போக்குவரத்துச் சபையில் இடம்பெறவுள்ளது.