ஞாயிறு, 28 அக்டோபர், 2012

பண அட்டை மோசடி குற்றச்சாட்டில் இலங்கையர் இருவர் நியூயோர்க்கில் கைது.

சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கணக்கான போலி பண அட்டைகளைப் பயன்படுத்தி 55 ஆயிரம் அமெரிக்க டொலர்களை தன்னியக்க இயந்திரங்களிலிருந்து பெற்றுக்கொண்டதான குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர்கள் இருவர் நியூயோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவரூபம் ஞானபண்டிதன் (வயது 28) மற்றும் ராகவன் பத்மசேனன் (வயது 24) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கனடா, ஒன்டாரியோ நகரில் வசித்து வருபவர்களாவர். இவர்களிடம் 257 போலி பண அட்டைகள், ஹோட்டல்களின் ரகசிய அட்டைகள், வெற்று அட்டைகள் என்பன இருந்துள்ளதுடன் 55ஆயிரத்து 689 அமெரிக்க டொலர்களும் காணப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.