வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விமான நிலைய பிரிவு அதிகாரிகள் குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்து கொண்டனர்.
சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் செல்லவென தயார் நிலையில் இருந்த இரு பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களிடம் காணப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப உதவிய முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முயற்சித்த மூன்று பெண்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.