புதன், 23 ஜனவரி, 2013

நாகப் பாம்பு நாயகி வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்

நாகப் பாம்பு நாயகி வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
நாகப் பாம்பை வைத்து இலங்கை மற்றும் உலகம் முழுக்க ஊடகங்களில் பிரபலமடைந்த நிரோசா விமலரத்ன என்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு நேர களியாட்ட விடுதியில் நடனமாடும் குறித்த பெண் வெல்லம்பிட்டிய பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (23) அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.

பின்னர் பொலிஸார் அப்பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இரவு நேர களியாட்ட விடுதியில் நாக பாம்புடன் நடனமாடிய குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் இருந்த நாக பாம்பை பறித்த பொலிஸார் அதனை தெஹிவளை சரணாலயத்தில் ஒப்படைத்தனர். பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவில் தனது நாக பாம்பை மீளப் பெற்றுக் கொண்ட பெண் ஊடகங்களில் பிரசித்தமானார்.

எனினும் இப்பெண் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொய் என பெண்ணை நன்கு அறிந்த பொது மக்கள் தெரிவித்தனர்.