திங்கள், 9 டிசம்பர், 2013

விருந்தில் கலந்து கொண்டவரின் காலை கத்தியால் குத்திய நபருக்கு வலைவீச்சு

விருந்தில் கலந்து கொண்டவரின் காலை கத்தியால் குத்திய நபருக்கு வலைவீச்சு விருந்துபசார நிகழ்வொன்றில் நபர் ஒருவரின் கால்லில் கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்தியவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (08) இரவு புத்தளத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் புத்தளத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் புத்தளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.