திங்கள், 9 டிசம்பர், 2013

காரில் சென்றவரை இடைமறித்து, வெட்டி பணம், நகை கொள்ளை

காரில் சென்றவரை இடைமறித்து, வெட்டி பணம், நகை கொள்ளைகொக்கருல்ல, சியால பிரதேசத்தில் காரில் பயணித்த நபரை வெட்டி, அவரிடமிருந்து பணம், தங்க நகை மற்றும் கையடக்க தொலைபேசி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரில் சென்ற நபரை மோட்டார் சைக்கிளில் இடைமறித்த இனந்தெரியாத நபர்கள் வெட்டி காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பின்னதாக அவரிடமிருந்து 9,70,000 ரூபா பணம், 1,20,000 ரூபா பெறுமதியான சங்கச் சங்கிலி மற்றும் 12,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்ட பணத்தில் 4,70,000 ரூபா பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (09) குருநாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.