செவ்வாய், 1 மார்ச், 2016

பண்பாடுகளை பாதுகாப்பதில் தற்போது அரசியல் அதிகாரத்தில் உள்ளவர் கள் தவறிவிட்டனர் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

தற்போது வடக்கு மாகா­ணத்தில் சமூக விரோதச் செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. தமிழர்களது மாபெரும் பண்பாட்டை பாது­காப்­ப­தற்கு அதி­கா­ரத்தை தற்­போது கொண்டுள்ள தமிழ்த் தலை­மைகள் தவறிவிட்­டன என்று ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா தெரி­வித்துள்ளார்.

கடந்த (26) பாரா­ளு­மன்­றத்தில் 23 இன் கீழ் (2) நிலை­யியற் கட்­ட­ளையின் கீழ் உரையாற்று­கை­யி­லேயே அவர் இவ்வாறு தெரி­வித்தள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில் -

வட­மா­கா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக சமூக விரோதச் செயற்­பா­டுகள், கலா­சார பிறழ்வுகள், குற்­றங்கள் என்­பன அதி­க­ரித்த நிலை காணப்ப­டு­கின்­றது இவ்­வாறு திட்டமிட்டு அரங்­கேற்­றப்­படும் சமூக விரோதச் செயற்­பா­டு­களால் அதற்கு எதி­ராக போராடவேண்­டிய நிலைக்குள் மக்கள் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். தற்­போது வரையில் அவ்­வா­றான சமூக விரோத செயற்­பா­டுகள் தொடர்­பாக எவரும் தண்டிக்­கப்­ப­டாத நிலைமையே காணப்­ப­டு­கின்­றது.

தமி­ழர்கள் மாபெரும் பண்­பாட்டைக் கொண்­ட­வர்கள். அந்தப் பண்­பாட்டை பாதுகாப்பதற்கு தற்­போது அதி­கா­ரத்தைக் கொண்­டுள்ள தமிழ்த் தலை­மைகள் ஆற்றலின்மையால் தவ­றி­யுள்­ளனர்.

வட­மா­கா­ணத்தில் தற்­போது போதைப்­பொருள் பாவ­னைகள், ஆபாச திரைப்­ப­டங்கள், சில தொழி­நுட்­ப­வ­ச­திகள் தற்­போது வெகு­வாக அதிகரித்­துள்­ளன. இதன் கார­ண­மாக சமூகத்தில் பல்­வேறு குரூ­ர­மான செயல்கள் இடம்­பெ­று­கின்­றன. எவ்­வா­றா­யினும் இவை இரண்டாம் தர­மான கார­ணி­க­ளாக காணப்­ப­டு­கின்றபோதும் அவை தாராளமானதாக அங்கு காணப்­ப­டு­கின்­றன என்­பதே உண்­மை­நி­லை­யாகும்.

அவ்­வா­றி­ருக்­கையில் சம­கா­ல­மாக பெண்­களின் பாது­காப்பு கேள்விக்குள்ளாக் கப்பட்டுள்ளது. விசே­ட­மாக சிறு­வ­ய­து­டைய வித்­தியா, ஹரிஸ்ணவி போன்ற பாட­சாலை மாண­விகள் பாலியல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­படும் நிலைமைகள் காணப்­ப­டு­கின்­றன. இவ்வாறான சம்­ப­வங்கள் தொடர்பில் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டாத நிலையே தற்­போது வரையில் நீடிக்கின்றது.

அவ்­வா­றான நிலை­மைகள் தொடர்­வதால் குற்­ற­வா­ளிகள் தப்பிச் செல்­வ­தற்­கான சூழ்ச்சிகள் நடை­பெ­று­கின்­ற­னவா என்ற சந்­தே­கமும் எழுகின்­றது. பொது­மக்கள் பாதுகாப்புக்கு குழுக்கள், இயக்­கங்­களின் செயற்­பா­டுகள் அவ­சி­ய­மா­வ­தோடு வடக்கில் இராணுவம் நிலை கொண்டிருக்கின்ற போதும் வடக்கு அமைதிப் பூங்காவாகவில்லை. அங்கு குற்றச் செயல்கள், குடும்ப வன்முறைகள், கலாசார பிறழ்வுகள் அதிகரித்தே காணப்படுகின்றனஇவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.