அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் அவர்களின்
உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் யாழில்
பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம்
முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நீண்டகாலமாக
விசாரணைகளின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14பேர் தமது விடுதலையை
வலியுறுத்தி
நேற்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுஜன அமைப்பின்
ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாண பிரதான பேருந்து
நிலையத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், அரசியல்
கட்சிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்து
தரப்பினரையும் பங்கேற்று கைதிகளின் விடுதலைக்கு ஒன்றுபட்டு
குரலெழுப்புமாறு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுஜன அமைப்பு
மேலும் கோரியுள்ளது.

