சனி, 5 மார்ச், 2016

நல்லாட்சி அரசிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்கும் வரை எங்கும் செல்லப் போவது இல்லை: தொட்டலங்க கஜுமா மக்கள்

தமது பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சா­னது உரிய தீர்­வினை முன்­வைக்கும் வரை நாங்கள் எமது குடி­யி­ருப்­பி­லி­ருந்து எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் வெளியே­றப்­போவது இல்லை என தொட்­ட­லங்க கஜுமா தோட்ட மக்கள் தெரிவிக்­கின்­றனர்.
 
வெறு­மனே அர­சியல் சுய­நலன் கருதி எமது பிரச்­சி­னை­களை அர­சா­னது கையாள்­வ­தோடு மறு­புறம் எம்மை மீண்டும் குடி­யி­ருப்­பி­லி­ருந்து அகற்றும் முயற்­சியின் அடி­ப­்படையில் சம்­பந்­தப்­பட்ட அரச அதி­கா­ரி­க­ளினால் எமக்கு மரண அச்­சு­றுத்­தல்­களும் காணப்­ப­டு­வ­தாக விசனம் தெரிவிக்­கின்­றனர்.

தொட்­ட­லங்க பிர­தே­சத்தில் உள்ள கஜுமா தோட்­டத்தில் அமைக்கப்­பட்­டி­ருந்த சில குடி­யி­ருப்­புக்கள் சில சட்­ட­விரோத­மானவை என்ற கார­ணத்தின் அடிப்­ப­டையில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­ன­ரினால் கடந்த மாதம் பலத்த பொலிஸ் பாது­காப்­பின் மத்­தியில் வீடுகள் சில முற்று முழு­வ­து­மாக அகற்­றப்­பட்­டன.
 
அந்­த­வ­கையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முக­மாக அன்­றைய தினம் அப்­பி­ர­தேச மக்கள் பாதை­களை மறைத்து எதிர்ப்பு நட­வ­டிக்­கையை வெளிப்­ப­டுத்­தினர்.
 
இவ்­வா­றான நிலையில் அம்­மக்கள் தொடர்ச்­சி­யாக எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை தெளிவு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பு நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை வீடுகள் அகற்­றப்­பட்ட தொட்­ட­லங்க கஜுமா தோட்­டத்தில் இடம்பெற்­றது.
 
இதன் போது கருத்து தெரிவிக்­கை­யி­லேயே குடி­யி­ருப்­புக்கள் அகற்­றப்­பட்­ட­மை­யினால் பாதிக்­கப்­பட்ட அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்த காமினி சில்வா என்பவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். நாங்கள் கடந்த பல வரு­டங்­க­ளாக வாழ்ந்து வரு­கின்ற எங்கள் குடி­யிருப்புக்கள் சட்­ட­வி­ரோ­த­மா­னவை என குறிப்­பிட்டு கடந்த மாதம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் எம்மை பல­வந்­த­மான முறையில் எவ்­வித முன்­ன­றி­வித்­த­லு­மின்றி வெளியேற்­றி­ய­மை­யினால் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பாரிய எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுத்தோம். அந்த வகையில் இது தொடர்பில் எம்­முடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்த அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க அர­சாங்­கத்­தினால் இது தொடர்பில் ஆய்­வொன்றை முன்­னெ­டுத்து உரிய தீர்வை பெற்­று­த­ரு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.
 
ஆனால் இது­வ­ரையில் அரச அதி­கா­ரிகள் எமக்கு எவ்­வித அறி­வித்­தல்­க­ளையும் வழங்­க­வில்லை.மறு­புறம் எமது பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் எவ்­வித தீர்­வு­க­ளையும் முன்­வைக்­க­வில்லை என்றார்.