திங்கள், 4 ஏப்ரல், 2016

உயர்ந்த அறிவார்ந்த ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை செய்யப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ஷ அதிருப்தி

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை நடத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வௌியிட்டுள்ளார். 
 
சாவகச்சேரியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பீரிஸ் வௌியிட்ட கருத்து குறித்து அண்மையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
 
அவரிடம் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அவர் போன்ற உயர்ந்த அறிவார்ந்த நபருக்கு இவ்வாறு அவமரியாதை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப் பிட்டுள்ளார்.

இது அவ்வாறு செய்வது நல்லதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
தங்காலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.