சீன அரசாங்கம் இலங்கைக்கு உதவிகள் புரியும்போது அரசியல் கட்சிகளையோ அல்லது தனிநபர்கள் தொடர்பிலோ அவதானம் செலுத்துவதில்லை.
மாறாக இலங்கை வாழ் மக்களையும் நாட்டின் கொள்கையை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படும்.
அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவினை மூன்றாம் தரப்பினரால் சீர்குலைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போதே சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் நேற்று சீன மக்கள் பொது மண்டபத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கை சந்தித்தனர்.
சீன ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லைமையிலான அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை மிகவும் பாராட்டதக்கதாகும். சீன அரசாங்கம் இலங்கைக்கு உதவிகள் புரியும் போது அரசியல் கட்சிகளையோ அல்லது தனிநபர்கள் குறித்தோ அவதானம் செலுத்துவதில்லை. மாறாக இலங்கை வாழ் மக்களையும் நாட்டின் கொள்கையை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படுவோம்.
2014 ஆம் ஆண்டு என்னுடைய இலங்கைக்கான விஜயமும் கடந்த ஆண்டின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன வருகை தந்ததும் இரு நாட்டு உறவுகளை மேலும் பலமடைய செய்துள்ளன.
மேலும் இலங்கையில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளமை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன்மூலம் இரு நாடுகளுக்குமிடையில் உறவினை மேலும் பலப்படுத்த முடியும் என்று நான் நம்புகின்றேன்.
அத்துடன் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை இலங்கை அரசாங்கம் மீளவும் ஆரம்பிக்கும் தீர்மானத்தை எடுத்தமைக்கு மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் குறித்த நகரை நாணய மற்றும் பொருளாதார வலயமாக்கியமை பாராட்டதக்கதாகும்.
இதேவேளை தொழிற்சாலை வலயங்களை உருவாக்கி புதிய தொழில்நுட்ப யுகத்தை நோக்கி இலங்கை பிரவேசமாகும் செயற்பாடு பல்வேறு நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். இதனை இலக்காக கொண்டு இலங்கையில் பல்வேறு முதலீடுகளை செய்து நாணய உதவிகளை செய்வதற்கு சீனா அரசாங்கம் தயாராகவே உள்ளது. இதன் முதற்கட்டமாக சிறுநீரக வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்கவுள்ளோம். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நட்புறவினை சீர்குலைப்பதற்கு மூன்றாவது தரப்பினால் முடியாது என்றார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிடுகையில்,இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கை தொடந்தும் உதவிகளை வழங்குவதனை நினைத்து நான் நன்றி கூற விரும்புகின்றேன். இலங்கையும் சீனாவும் பூகோள பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி பயணிக்கின்றன. இதற்கான சீனாவின் ஒத்துழைப்பு பாராட்டதக்கது.
கடந்த காலங்கள் தொடர்பில் விமர்சனம் மாத்திரம் செய்யாமல் எதிர்கால இலட்சியத்தை அடைவதே தேசிய அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆசிய பிராந்தியத்தை பலப்படுத்தும் வகையில் இந்து சமுத்திரத்தி வலயத்தில் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டியுள்ளது. இதற்கு சீனாவின் பங்களிப்பு அளப்பரியது என்றார்.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ இமங்கள சமரவீர இமலிக் சமரவிக்கிரம இநிமல் சிறிபால டீ சில்வாஇ ரவூப் ஹக்கீம் மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.