சனி, 18 ஆகஸ்ட், 2018

மட்டு நகரில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரில் நேற்று நள்ளிரவு பொலிஸாரின் திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கைகளை மட்டு நகரில் மேற்கொண்டனர். 


இதன்போது வீதியால் சென்ற அனைத்து வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நடமாடித்திரிந்தவர்களை வழி மறித்து பொலிஸார் சோதனை நடாத்தினர். 
 
மேலும், சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 10 பேரை கைது செய்துள்ள தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.